COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Thursday, May 7, 2020

Oru Small Kavithai | Natpu | Natpu Oru Kathai

நண்பா கடவுள் எனக்கு
அளித்த காணிக்கை நீ
நீ இருக்கையில் என்ன
கவலை இனி எனக்கு
இன்பமாய் நகரும்
இனிமையாய் முடியும் என்
நாட்கள் அனைத்தும் !
வாழ்நாளில் ,
நான் நினைத்து மகிழும்
நீங்காத என் நினைவுகளின்
ஓட்டுமொத்த நினைவுகல் நீ !
கடவுளுக்கும் கிடைக்காத பரிசு
நண்பன் , எந்த நண்பனுக்கும்
கிடைக்காத நண்பன் என்
நண்பன் நீ !
ஈன்ற தாயின் அன்பும்
ஈன்ற தந்தையின் அறிவும்
உடன் பிறந்தோர்களின் அணைப்பும்
உன் உருவில் கண்டேன்
ஒன்றாய் !
உன் அன்னை படைத்தாள்
உன்னை ஒரு முகத்தோடு
ஆனால் பன்முகம் கொண்டாய் எனக்காக
என் காதலின் தூதுவனாய்
என் மணநாள் தோழனாய்
என் எதிரிகளின் எதிரியாய் நீ நண்பா !
போட்டி உண்டு எங்களுக்குள்
யார் அன்பு செலுத்துவதில் அதிகம் என்று
பொறாமை உண்டு எங்களை
பார்க்கும் மற்றவர்களுக்குள் யார் இவர்கள்
நிகழ்கால கர்ணனா – துரியோதரன
என்று !
நம் நட்பிற்கு மரணமே
இல்லை நண்பா
நம் நினைவுகளால் மட்டும்
இல்லை நண்பா
நம் நட்பை பற்றி என்றும்
பேசும் மனிதர்களின் மூலமாகவும்
தொடரும் பல நூற்றாண்டுகளை
கடந்தும்.

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews